ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த தனுஷ், கொலவெறி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார். அதனால் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்பும் வந்தது. ராஞ்சனா என்ற இந்தி படத்தில் நடித்தார், அப்படம் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சேர்ந்தது. தொடர்ந்து அமிதாப் பச்சன் உடன் ஷமிதாப் படத்திலும் நடித்தார். இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லையென்றாலும் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது மாரி படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ், அடுத்து சற்குணம் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில், தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இந்த விருதை தனுஷூக்கு இயக்குநர் பாலா வழங்கினார். அப்போது பாலா பேசுகையில், தனுஷை ஆரம்பத்திலிருந்தே நான் பார்த்து வருகிறேன். தனுஷ் தமிழ்படத்திற்கு கிடைத்த சொத்து. ஷமிதாப் படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே அப்படத்தின் கதை எனக்கு தெரியும். இயக்குநர் பால்கி அந்த கதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால் அந்தப்படம் எப்படி வந்திருக்கிறது என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. அதன்படி ஒருநாள் ஷமிதாப் படத்தை பார்க்க வேண்டும் என்று பால்கியிடம் கூறினேன். ஆனால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தார். ஆனாலும் நான் படத்தை பார்க்க ஏற்பாடு செய்தார். அதில் தனுஷின் நடிப்பை பார்த்தபோது, தனுஷ் தமிழ்பட உலகுக்கு மட்டுமன்றி இந்திய சினிமாவின் சொத்தாக இருக்கிறார் என்றார். மேலும் தனுஷை வைத்து எப்போது படம் பண்ண போகிறீர்கள் என்று கேட்டபோது, அவர் கால்ஷூட் கொடுத்தால் நான் தயார் என்றார் பாலா.
உடனே தனுஷ், நான் அவருக்கு கால்ஷீட் கொடுப்பதா...? என்பது போன்ற ரியாக்ஷ்ன் செய்த தனுஷ், அவர்(பாலா) எப்போது கூப்பிட்டாலும் நான் உடனே நடிக்க வந்துவிடுவேன். அவர் இன்னும் என்னை கூப்பிடவில்லை என்றார்.
இதன்மூலம் பாலா மற்றும் தனுஷ் இணைந்து விரைவில் படம் பண்ண வாய்ப்பு இருக்கிறது.