ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரீமா காக்தி இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர். ஷலோ படத்தில் நடிப்பதற்காக, சயீப் அலி கானிற்கு முன்பணமாக ரூ. 2 கோடி தரப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்படத்தில், சயீப் நடிக்க வேண்டிய கேரக்டரில், பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். சயீப் அலி கான், தான் வாங்கிய ரூ. 2 கோடி பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், சயீப், இதுவரை பணத்தை திருப்பி அளிக்கவில்லை. இதனையடுத்து, மிஸ்டர் ஷலோ படத்தை தயாரிக்கும் இணை தயாரிப்பாளரான எக்செல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனர் ரித்தேஷ் சித்வானி மற்றும் பர்ஹான் அக்தர் இருவரும் இணைந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார், விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.