ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜய்யின் தம்பி (சித்தி மகன்) என்ற விசிட்டிங் கார்டோடு திரைத்துறைக்கு வந்தவர் விக்ராந்த். 2005ல் கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான விக்ராந்த் அதன் பிறகு சுமார் அரை டஜன் படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவற்றில் எந்தப் படமும் விக்ராந்துக்கு வெற்றியைத் தரவில்லை. தன் அண்ணனான விஜய்யும் விக்ராந்தை அருகில் சேர்த்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் தான் சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார் விக்ராந்த். அப்போது விஷால் உடன் நட்பு ஏற்பட்டது. விக்ராந்தின் நிலமையை அறிந்து தான் நடித்த ''பாண்டிய நாடு'' படத்தில் விக்ராந்துக்கு முக்கிய வேடம் கொடுத்தார். அது மட்டுமல்ல, விக்ராந்தை சோலோ ஹீரோவாக வைத்து தானே ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் சொன்னார் விஷால். அந்தப்படம் எப்போது தொடங்கப்படும் என்று தெரியாத நிலையில், இப்போது வில்லனாகவும் நடிக்கத் துணிந்துவிட்டார். உதயநிதி தற்போது நடித்து வரும் கெத்து படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார் விக்ராந்த்.