ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வல்லவன் படத்தில் நயன்தாரா- ரீமாசென்னுடன் இணைந்து அம்மாடி ஆத்தாடி உன்னை எனக்கு தறியாடி -என்று அதிரடி குத்தாட்டம் ஆடியிருந்தார் சிம்பு. அந்த பாடலை அவரது தந்தையான டி.ராஜேந்தரே சிம்புவுக்காக பின்னணி பாடியிருந்தார்.
அதேபோல் இப்போது விழித்திரு என்ற படத்துக்காக டி.ராஜேந்தரும் ஒரு பாடலில் இரண்டு இளவட்ட நடிகைகளுடன் இணைந்து சமீபத்தில் ஆடிய குத்தாட்டம் செம கலக்கலாக வந்துள்ளதாம். அதோடு, அந்த பாடலில் ஆடிய இளவட்ட நடிகைகளே அவ்வப்போது கால் வலிக்கிறது. இடுப்பு வலிக்கிறது என்று ரெஸ்ட் எடுக்க ஓடி விட்டார்களாம்.
ஆனால், டி.ஆரோ ரெஸ்ட்டே எடுக்காமல், களத்தில் நின்றபடி அதிரடி நடனமாடினாராம். 60 வயதிலும் அசராமல் அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்த அனைவருமே அவரது உடல் உறுதியை ஆச்சர்யமாக பேசிக்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த படம் வெளியான பிறகு டி.ஆரின் நடனத்துக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்படும் என்கிறார்கள்.