மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் நாயகியாக நடித்தவர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா. ஆனால் அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதன்காரணமாக அதன்பிறகு அவரை கோலிவுட் கண்டுகொள்ளவில்லை. பின்னர் இந்தி படமொன்றில் நடிப்பதாக கூறி வந்த ஐஸ்வர்யா அர்ஜூன், அந்த படத்திலும் நடிக்கவில்லை. இதற்கிடையே தமிழில் தேடிவந்த படங்களில் கதைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதையடுத்து டைரக்சன் பயிலப்போவதாக சொல்லி தனது தந்தை இயக்கி நடித்த ஜெய்ஹிந்த்-2 படத்தில் உதவி இயக்குனராகவும் செயல்பட்டார். அதனால் அடுத்தபடியாக அவர், ரஜினியின் மகள்களைப்போன்று இயக்குனராக வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தந்தை அர்ஜூன் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் நாயகியாகவே நடிக்கிறார் ஐஸ்வர்யா.
நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட எடுக்கப்படும் அந்த படத்தில் கதக் நடன கலைஞராக நடிக்கிறாராம் ஐஸ்வர்யா. அதனால் அவருக்கு முறையான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதாம். முதல் படத்தில் ரசிகர்களை பெரிதாக கவர முடியாத ஐஸ்வர்யாஅர்ஜூன், இந்த படத்தில் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என்று நடிப்பு, நடனம் இரண்டிலுமே தனிக்கவனம் செலுத்தப்போகிறாராம்.