ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2' என ஒரே சமயத்தில் இரண்டு ஹிட் படங்களில் நடித்து தமிழில் தன்னடைய வெற்றிக் கணக்கைத் துவக்கியுள்ளார் நித்யா மேனன். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு பல புதுப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். இருந்தாலும் அவர் உடனடியாக எந்தப் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட இது பற்றி நித்யா தெரிவித்திருந்தார். 'எனக்கு தற்போது நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நெருக்கமான காட்சிகள், கிளாமர் காட்சிகள் ஆகியவற்றுடன் கூடிய படங்களாகவே வருகின்றன. அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பேங்க் பேலன்ஸ் பற்றிக் கவலையில்லை,” என்று சொல்லியிருக்கிறார்.
கேரளாவிலிருந்து வரும் நடிகைகளில் பலர் கிளாமராகவும், நெருக்கமாகவும் நடிப்பது வழக்கம். ஏன், 'கொம்பன்' படத்தில் கூட ஒரு நெருக்கமான பாடல் காட்சியில் லட்சுமி மேனன் கூட நடித்திருப்பார். நயன்தாரா, இனியா, ஓவியா இப்படி பல கேரள நடிகைகளும் கிளாமராக நடித்து வருகிறார்கள். ஆனால், அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருந்து ஆச்சயரிப்பட வைக்கிறார் நித்யா மேனன் என்கிறது கோலிவுட் வட்டாரம்.