ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொதுவாக கல்லூரி காலத்தை தாண்டிவிட்டால் நண்பர்கள் வேலை நிமித்தம் பரபரப்பாகிவிடுகிறார்கள்.. கல்யாணம் பண்ணிவிட்டாலோ.. கேட்கவே வேண்டாம் திசைக்கொன்றாய் பிரிகிறார்கள்.. அப்படி பிரிந்த நான்கு நண்பர்கள் பல வருடங்கள் கழித்து ஒன்றுகூடி தங்களது மனைவியருடன் ஒரே குடும்பமாக சில நாட்கள் வாழ முற்படுகிறார்கள்.. இதனால் கிடைக்கும் சந்தோசம், சங்கடம் இவற்றை வைத்து மலையாளத்தில் 'லுக்கா சுப்பி' என்கிற படம் உருவாகியுள்ளது.
'பிலிப்ஸ் அன்ட் மங்கி பென்' படத்தை தொடர்ந்து ஜெயசூர்யாவும், ரம்யா நம்பீசனும் இந்தப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள். நண்பர்களில் முக்கியமானவராக முரளிகோபி நடிக்கிறார். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் பணியை ரம்யா நம்பீசன் முன்னின்று எடுத்து செய்கிறார். இந்த கெட்டுகெதரின்போது இதுவரை தங்களது கணவர்களின் சீரியஸ் முகங்களையே பார்த்துவந்த மனைவிமார்கள், அவர்களின் ஆட்டம், பாடல், காமெடி என பல புதிய முகங்களை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள்.. அதில் முரளிகோபியின் முன்னாள் காதலும் அதை சொல்லாமலே அவர் பூட்டிவைத்த கதையும் அவரது மனைவிக்கு தெரியவர கதை அங்கிருந்து சூடு பிடிக்கிறதாம்.