ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி படத்தில் அப்போதைய புதுமுக நடிகரான தினேசுடன் நடித்தவர் நந்திதா. அதையடுத்து சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி, விஷ்ணு, பரத் என பேசப்படும் நடிகர்களுடன் நடித்த அவர், இடம் பொருள் ஏவல் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார். தொடர்ந்து, அஞ்சல படத்தில் விமலுடனும், உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுடன் நடித்துள்ளார் நந்திதா. இதன்பிறகு இன்னும் ஒருபடி மேலே ஏறி மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் நந்திதாவின் திட்டமாக இருந்தது.
ஆனால், அப்படி அவர் நினைத்துக்கொண்டிருந்த நேரம் விஜய்யின் புலி படவாய்ப்பு வந்தபோது, நாம் நினைத்தது நடக்கப்போகிறது என்றுதான் உற்சாகத்தில இருந்தார் நந்திதா. ஆனால், அந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என்ற இரண்டு மெகா நடிகைகள் இருக்க, இவரை இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க வைத்து விட்டு டாடா காட்டி விட்டனர்.
இருப்பினும், விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து விட்டோம் என்கிற பெருமையுடன் காணப்படும் நந்திதா, எந்நேரமும் விஜய் புராணம் பாடி வருவதை சில நடிகைகள் கிண்டல் செய்யத் தொடங்கி விட்டார்களாம். இதனால் கடுப்பான அவர், இது ஆரம்பம்தான். கூடிய சீக்கிரமே விஜய்யுடன் ஒரு முழுப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பினை பெறுவேன். அது நிச்சயம் நடக்கும் என்று சொல்லி அவர்களின் வாயடைத்து வைத்துள்ளாராம்.