ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமல்ஹாசன் நடிப்பில் தற்போது வௌியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ''உத்தம வில்லன்''. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக பாபநாசம், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து படங்கள் வௌிவர இருக்கின்றன. இந்நிலையில் இந்தபடங்களுக்கு அடுத்தப்படியாக ஒரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு 'ஓர் இரவு' என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வௌியானது. அதேசமயம் த்ரிஷா, கமலுடன் மீண்டும் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதியானது. மேலும் கமல் படத்திற்காக செல்வராகவன் படத்தை த்ரிஷா வேண்டாம் என்று சொன்னதாக கூட செய்திகள் வௌிவந்தன. சரி விடுங்க இதெல்லாம் பழைய கதை.
இப்போது விஷயம் என்னவென்றால் இப்படத்தின் தலைப்பு ஓர் இரவு கிடையாதாம். ''தூங்கா வனம்'' தான் படத்தின் தலைப்பு என்கிறார்கள். சமீபத்தில் இந்த தலைப்பை கமல் தரப்பில் பதிவு செய்திருக்கிறார். ஆக கமலின் அடுத்த பட தலைப்பு தூங்கா வனமாக இருக்கலாம் என்கிறார்கள். கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கும் இப்படம் ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாக இருக்கிறது.
அதோடு இப்படத்தில் கமலுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்களாம். ஒருவர் த்ரிஷா, ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டார். இப்போது புதிதாக மனீஷா கொய்ராலாவும், காவியத்தலைவன் பட நாயகி அனைகா சோதியும் நடிக்க இருக்கிறார்களாம். இவர்களோடு பிரகாஷ் ராஜூம் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.
விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வௌியாக இருக்கிறது.