விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
'அமரகாவியம்' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மியா ஜார்ஜ் தான் கடந்த வருடத்தில் மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்த நடிகை. இப்போதும் மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழிலும் பிசியான நடிகையாக மாறியுள்ளார் மியா ஜார்ஜ்.. சமீபத்தில் அன்னையர் தினத்தை கொண்டாடிய மியா ஜார்ஜ், தனக்கு ஒரு அம்மா அல்ல.. இரண்டு அம்மாக்கள் என்று கூறியுள்ளார்.. ஆச்சர்யமாக இருக்கிறதுதானே.. அவர் வாயாலேயே அவர் சொல்வதை கேட்போமே.
“என் அம்மா எப்போதும் என் கூடவே நிழல் போல இருப்பார்.. நான் போகும் இடங்களில் எல்லாம் என்கூட நிழல் போலவே வருவார். அவர் என்னுடன் கூடவே வராத இடம் ஒன்று உண்டு என்றால் அது என்னுடையை காலேஜ் கிளாஸ் ரூம் ரூம் தான். அதுகூட டீச்சர் விடமாட்டார்கள் என்பதால் தான். எனக்கு வீட்டில் இன்னொரு அம்மாவும் உண்டு.. அது என்னுடைய சகோதரி கினி லிஜோ தான். இரண்டு அம்மாக்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.