ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'இரண்டு வயசுல இருந்தே, இவளுக்கு சங்கீதத்து மேல ஆர்வம்; அப்போ வெளிவந்த, 'சிந்து பைரவி' படத்தோட, 'நான் ஒரு சிந்து...' பாடல் இவளுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த பாடல்தான், இவ குரல்ல நாங்க கேட்ட முதல் பாடல்!' - தன் மகள் 'வைக்கம்' விஜயலட்சுமி, இசைத்துறையில் எடுத்து வைத்த முதல் அடியை, பெருமிதத்துடன் சொல்கிறார், அவரது தந்தை முரளிதரன்.
கேரள மாநிலத்தின், 'வைக்கம்' பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. பிறவியிலிருந்தே கண் பார்வை இல்லாத இவருக்கு, இசை தான் எல்லாமே! இசையை பின்னணியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதில் இருந்தே கர்நாடக சங்கீதத்தில் ஊறித் திளைக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. அந்த அனுபவம் தந்த முதிர்ச்சியுடன், முதன்முறையாக, மலையாள, 'செல்லுலாய்ட்' திரைப்படத்தில் இவர் பாடிய, 'காட்டே... காட்டே' பாடலுக்கு, மாநில விருது தந்து கவுரவித்தது கேரள அரசு. தொடர்ச்சியாக, 'நடன்' திரைப்படத்தில் பாடிய, 'ஒட்டக்கு பாடுன' பாடலுக்கு, 'பிலிம் பேர்' விருது கிடைத்தது. தற்போது வெளிவர இருக்கும், 'பாகுபாலி, ரோமியோ ஜூலியட், இடம் பொருள் ஏவல், மாஸ்' படங்களின் பாடல்களுக்கு குரல் கொடுத்திருப்பவர், ஆங்காங்கே குழந்தைத்தனமாக வெளிப்படும் சிரிப்புடன், நம்முடன் உரையாடிய போது...
தமிழில் முதல் வாய்ப்பும், அனுபவமும் ?
மலையாளத்துல வெளிவந்த, 'செல்லுலாய்ட்' படம்தான், தமிழ்ல, 'ஜெ.சி.டானியல்' படமா வந்தது. அந்த படத்துல நான் பாடின, 'காற்றே காற்றே...' பாடல் தான், என் முதல் தமிழ் பாட்டு! அதை கேட்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், 'குக்கூ' படத்துல, 'கோடையில மழை போல...' பாட வைச்சாரு. பின், டி. இமான் இசையில, 'என்னமோ ஏதோ...' படத்துக்காக, 'புதிய உலகை தேடிப் போகிறேன்...' பாட்டு! அப்புறம், 'வெள்ளக்காரதுரை'யில, 'காக்கா முட்டை...' பாட்டு! இதுல, 'புதிய உலகை தேடிப் போகிறேன்...' பாட்டு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்; காரணம், அதுல நான் என்னோட, 'காயத்ரி வீணை'வை பயன்படுத்தியிருக்கேன்!
அது என்ன 'காயத்ரி வீணை?'
எனக்கு 15 வயசு இருக்கும்னு நினைக்கிறேன்; என் விருப்பத்துக்காக, ஒரு ஒற்றை கம்பியை வைச்சு, ஒரு வீணை செஞ்சு கொடுத்தாங்க என் அப்பா! அந்த வீணையை மீட்டிதான், நான் பாட்டு கத்துக்க ஆரம்பிச்சேன். அதை வைச்சு, நிறைய மேடை கச்சேரிகளும் பண்ணியிருக்கேன். ஒரு நிகழ்ச்சியில, நான் வீணை வாசிக்கிறதைப் பார்த்த, 'குன்னக்குடி' வைத்தியநாதன், என்னை ஆசிர்வதிச்சு, என் வீணைக்கும் பேர் சூட்டினாரு; அந்த பேர் தான் காயத்ரி. அப்போ இருந்து, இது 'காயத்ரி வீணை!'
'காயத்ரி வீணை' அடிக்கடி மீட்டும் ராகம்?
(சிரிக்கிறார்) என் வீணை, எல்லா ராகங்களுக்கும் உயிர் கொடுக்கும். ஆனா, எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னா, அது 'சஹானா' ராகம் தான்; சந்தோஷத்தை மட்டுமே பிரதிபலிக்கிற ராகம் அது! 'அவ்வை சண்முகி' படத்துல வர்ற, 'ருக்கு... ருக்கு...' பாடல், இந்த ராகத்துல அமைஞ்சது தான்! நான் அடிக்கடி முணுமுணுக்குற பாடல்கள்ல, இதுவும் ஒண்ணு!
நீங்க ஒரு படத்துல நடிச்சதா...?
ஆமா... 'எழு தேசங்களுக்கும் அகலே'ங்கற மலையாளப் படத்துல நடிச்சேன். பாடிட்டே நடிக்கிற மாதிரியான ஒரு சின்ன கதாபாத்திரம்; ஆனா, அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்! அதுல, பாறை மேல ஏறுற மாதிரி ஒரு காட்சி; நான் ரொம்பவே பயந்துட்டேன். அந்த நிமிஷமே, 'இனி நடிக்க வரக் கூடாது'ன்னு முடிவும் பண்ணிட்டேன். நிச்சயமா, இனி நடிக்க மாட்டேன்!
இசையில் இனி?
இளையராஜா சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில பாடணும்; எஸ்.பி.பி., சார் கூட பாடணும்; இளையராஜா சாரோட இசை பற்றி ஆய்வு செய்யணும்; ம்ம்ம்... இப்படி, இன்னும் நிறைய இருக்கு!