Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கஷ்டகாலத்துல காதலிகூட கைவிட்டுட்டா! - சிம்பு உருக்கம்

10 மே, 2015 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Simbu-speak-in-Inmie-ippadithan-audio-launch

சந்தானம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் இனிமே இப்படித்தான். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில், கெளதம்மேனன், ராஜேஷ்.எம், சிம்பு, ஆர்யா, உதயநிதி, சந்தானம், தம்பிராமைய்யா, நரேன், ஆஷ்னா சவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது, சிம்பு பேசுகையில், கடந்த 2 வருசமா நான் நடிச்ச படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால எந்த விழாவுலயும் நான் கலந்துக்கிட்டதில்ல. கடைசியாக கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தோடு ஆடியோ பங்சனுக்கு வந்தவன், இப்ப இனிமே இப்படித்தான் படத்தோடு ஆடியோ பங்சனுக்குத்தான் வந்திருக்கேன்.


நான் சந்தானத்தை மன்மதன் படத்துல அறிமுகம் செய்தேன். அப்ப நிறைய எதிர்ப்பு இருந்தது. ஆனா இந்த பையன்கிட்ட நல்ல திறமை இருக்கு பெருசா வருவான்னு சொல்லி நடிக்க வச்சேன். இப்ப சந்தானம் பெருசா வளர்ந்து நிக்கிறாரு. சந்தோசமா இருக்கு. மேலும், எனக்கு டேலண்ட் கிடையாது. என்னோட டேலண்ட உருவாக்கினது எங்க அப்பாதான். இந்த உலகத்துல தட்டிவிட நிறையபேர் இருக்காங்க, ஆனா தட்டிக்கொடுக்கத்தான் ஆளில்லை. ரெண்டு வருசமா என் படம் எதுவுமே திரைக்கு வராததால ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனாலதான் கடவுளைத் தேடிப்போனேன். சின்ன வயசுல இருந்தே நான் கஷ்டமின்னா என்னன்னு தெரியாமலேயே வளர்ந்தேன். ஆனா இந்த ரெண்டு வருசத்துல ஒரு சாதாரணமான மனுசனா இருந்து எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டேன். எப்பவுமே நான் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எங்க அம்மாகிட்டதான் கொடுப்பேன். ஆனா இப்ப என்னால கொடுக்க முடியல. அவங்கிட்ட செலவுக்கு பணம் கேட்கவே கஷ்டமா இருக்கு.


இந்த நேரத்துல எனக்கு ஒரு நடிகையோட காதல் வந்தது. ஆனா அவளும் என்னோட கஷ்டகாலத்தைப் பார்த்துட்டு விட்டுவிட்டு போயிட்டா. ஆக ஏற்கனவே எனக்குள் இருந்த கஷ்டம் மட்டுமில்லாம, காதலியும் விட்டுட்டு போன கஷ்டம் என்னை ரொம்ப வருத்தி எடுத்தது. கடவுள் கஷ்டத்தை கொடுத்து நம்மள டெஸ்ட் பண்றான்னு நெனச்சிக்கிட்டேன். எல்லாமே போயி எங்கிட்ட உயிர் மட்டும்தான் இருந்தது.


அப்பத்தான் கெளதம்மேனன் ஒரு படத்துல நடிக்க கூப்பிட்டாரு. போய் நடிச்சிக்கிட்டிருந்தப்ப, தல அஜித் படம் இயக்குற வாய்ப்பு அவருக்கு வந்தது. அப்ப என்னை விட எங்க அப்பாதான் ரொம்ப பீல் பண்ணினாரு. அவர் இருந்த சூழ்நிலையில் அஜித் படம் இயக்கிறதையே பெருசா நெனச்சாரு. நானும் விட்டுக்கொடுத்தேன். அஜித்கூட அப்பாகிட்ட உங்க பையன் நல்லா வருவான் பீல் பண்ணாதீங்கன்னு சொன்னாரு.


அந்த நேரத்துல என்னோட சோகம் இன்னும் அதிகமானது. அப்பத்தான் நமக்காக வாழுறதை விட மற்றவங்களுக்காக வாழுறதுன்னு முடிவெடுத்தேன். இந்த ரெண்டு வருசத்துல மீடியா என்னைப்பத்தி நிறைய செய்தி எழுதினாங்க. இன்னும் சொல்லப்போனா ஒரு படம்கூட வெளியாகாத நிலையில என்னைப்பத்தி ஏதாச்சும் செய்தி எழுதிக்கிட்டே இருந்ததால அவங்க என்னை தாங்கிப்பிடிச்சாங்கன்னுதான் சொல்லணும். இல்லேன்னா காணாமல் போயிருப்பேன் என்று உருக்கமாக பேசினார் சிம்பு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in