மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்த பா.விஜய், ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை எழுதி தேசிய விருது பெற்றவர். அதனால் வாலி, வைரமுத்துவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த முன்னணி கவிஞர் அவர்தான் என்கிற நிலை உருவானது.
இந்த நேரத்தில்தான் அவருக்குள் இருந்த நடிகன் வெளியே எகிறி குதிக்க, ஞாபகங்கள் என்ற படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசினார் பா.விஜய். ஆனால் அந்த படம் வெற்றிபெறவில்லை. இருப்பினும் அதையடுத்து, கருணாநிதியின் கதை வசனத்தில் இளைஞன் என்ற படம் கிடைத்ததால், அப்படம் தன்னை ஹீரோவாக நிறுத்தி விடும் என்ற பெருத்த நம்பிக்கையில் நடித்த பா.விஜய்க்கு மறுபடியும் ஏமாற்றமே கிடைத்தது.
ஆனபோதும், அவருக்குள் இருந்த நடிப்பு தாகம் அடங்கவில்லை. பின்னர் 30 ரூபாய் சிடி என்ற படத்தில் நடித்தார்.அப்படம்தான் இப்போது தகடு தகடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படம் எப்போதோ முடிந்து விட்டபோதும், படத்தை வாங்கத்தான் ஆளில்லை. அதனால், அப்படத்தின் தயாரிப்பாளர், இதேபோன்று இன்னும் 5 படங்கள் தயாரித்த பிறகு, 5 படங்களையும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வேன் என்று சொல்லிக்கொண்டு தகடு தகடு படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
அதனால், பல மாதங்களாக படம் வெளியாகும் என்று வெயிட் பண்ணிக்கொண்டிருந்த பா.விஜய், இப்போது மற்ற படங்களையும், இயக்குனர்களையும் நம்பாமல் தனக்கான கதையே தானே உருவாக்கி, ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதோடு, மூன்று முறை தவற விட்ட வெற்றிக்கனியை இந்தமுறை எப்படியும் பறித்து விடுவேன் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகிறார் வித்தகக்கவிஞர் பா.விஜய்.