ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை |
பிரபல எழுத்தாளரான தமயந்தி கடந்த சில வருடங்களாக திரைப்படத்துறையில் இயங்கி வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த தமயந்தி, பிரபல பண்பலை வானாலியில் சில வருடங்கள் பணியாற்றினார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தார். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் தற்போது இயக்கி வரும் விழித்திரு படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் தமயந்தி.
விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு நடிக்கும் விழித்திரு படத்துக்கு பாடல் எழுதியதைத் தொடர்ந்து ஒரு இசைஆல்பத்துக்கும் பாடல் எழுதினார். தமயந்தி எழுதிய முதல் பாடல் இடம்பெற்றுள்ள விழித்திரு படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஒருநாள் கூத்து என்ற படத்திற்கு பாடல் எழுதி உள்ளார். அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ் நடிக்கும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். திருடன் போலீஸ் வெற்றிப்படத்தை தயாரித்த கெனன்யா பலிம்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது.