விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பிரபல எழுத்தாளரான தமயந்தி கடந்த சில வருடங்களாக திரைப்படத்துறையில் இயங்கி வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த தமயந்தி, பிரபல பண்பலை வானாலியில் சில வருடங்கள் பணியாற்றினார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தார். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் தற்போது இயக்கி வரும் விழித்திரு படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் தமயந்தி.
விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு நடிக்கும் விழித்திரு படத்துக்கு பாடல் எழுதியதைத் தொடர்ந்து ஒரு இசைஆல்பத்துக்கும் பாடல் எழுதினார். தமயந்தி எழுதிய முதல் பாடல் இடம்பெற்றுள்ள விழித்திரு படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஒருநாள் கூத்து என்ற படத்திற்கு பாடல் எழுதி உள்ளார். அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ் நடிக்கும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். திருடன் போலீஸ் வெற்றிப்படத்தை தயாரித்த கெனன்யா பலிம்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது.