சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பிரபல எழுத்தாளரான தமயந்தி கடந்த சில வருடங்களாக திரைப்படத்துறையில் இயங்கி வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த தமயந்தி, பிரபல பண்பலை வானாலியில் சில வருடங்கள் பணியாற்றினார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தார். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் தற்போது இயக்கி வரும் விழித்திரு படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் தமயந்தி.
விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு நடிக்கும் விழித்திரு படத்துக்கு பாடல் எழுதியதைத் தொடர்ந்து ஒரு இசைஆல்பத்துக்கும் பாடல் எழுதினார். தமயந்தி எழுதிய முதல் பாடல் இடம்பெற்றுள்ள விழித்திரு படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஒருநாள் கூத்து என்ற படத்திற்கு பாடல் எழுதி உள்ளார். அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ் நடிக்கும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். திருடன் போலீஸ் வெற்றிப்படத்தை தயாரித்த கெனன்யா பலிம்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது.