ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் - தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளரும், இளம் தொழிலதிபருமான வருண்மணியனுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால், அதன் பின் அவர்களிருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள் என்ற செய்திகள் கடந்த சில வாரங்களாகவே அடிபட்டு வந்தன. இருதினங்களுக்கு முன் த்ரிஷா தன்னுடைய 33வது பிறந்த நாளைக் கொண்டாடினார். த்ரிஷாவுக்கு பலரும் வாழ்த்து கூறிய நிலையில் வருண் மணியன் வாழ்த்து சொல்லவேயில்லை. இதன் மூலம் அவர்களிருவரின் பிரிவு கிட்டத்தட்ட உண்மையாகி இருந்தது.
இதனிடையே த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனும், இந்த திருமணம் நின்றதை உறுதி செய்தார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் நின்று போனதற்கு குடும்பத்தில் உள்ள சில பெரியவர்கள் தான் காரணம் என்று கூறியிருந்தார். மேலும் அதைப்பற்றி அவர் விரிவாக பேசவும் மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், திருமணம் நின்றது பற்றி இதுவரை எந்தவொரு கருத்தும் சொல்லாமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் நின்றதை உறுதி செய்திருக்கிறார். த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, என்னைப்பற்றி நிறைய வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். நான் இப்போது தனியாக சந்தோஷமாக இருக்கிறேன், நன்றி என்று கூறியுள்ளார்.
த்ரிஷாவே தான் தனியாக இருப்பதாகவும், அதுவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் வருண் மணியன் உடனான திருமணம் நின்று போனது உறுதியாகியுள்ளது.