ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வில்லனாக நடிக்கத் தொடங்கிய டைரக்டர் சமுத்திரகனி, பின்னர் குணசித்திர நடிகரானார். அதையடுத்து புரட்சிகரமான வேடங்களில் நடித்தார். இப்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார். முக்கியமாக, பல மார்க்கெட் இல்லாத ஹீரோக்களின் படங்களில் அவர்தான் இருக்கிறார். இவரை வைத்துதான் படங்களின் வியாபாரம் என்கிற நிலை இருப்பதால், அந்த ஹீரோக்களுக்கு இணையாக சமுத்திரகனிக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது ராவா என்ற படத்தில் ஒரு சஸ்பென்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. இப்படத்தில் புதுமுக ஹீரோ நடிப்பதால் அவரை விட சமுத்திரகனிக்குத்தான் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் சேர்த்து ஒரேயொரு நாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். ஆனால், இவர்களில் அவர் யாருக்கு ஜோடி என்பது படத்தின் க்ளைமாக்சில்தான் தெரியுமாம். அந்த அளவுக்கு அவர் யாருக்கு ஜோடி என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இந்த ராவா உருவாகிறதாம். குறிப்பாக, இதுவரை நடித்த படங்களில் இருந்து இளமையான கதாபாத்திரத்தில் வருகிறாராம் சமுத்திரகனி.