ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் கேரளாவை சேர்ந்த சரிதா நாயர். சற்றும் பரபரப்புக்கு குறைவில்லாத இவர், சோலார் பேனல் பிசினசிற்காக தன்னை பலபேர் சீரழித்ததாக கூறி அதில் மோகன்லாலின் பெயரம் இருப்பதாக சொல்லி அதிரவைத்தவர். அப்படிப்பட்ட சரிதா நாயர் பற்றிய கதையை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் படமாக்க இருப்பதாக கூறி இணையதளத்தில் செய்திகள் உலாவர, அதை பார்த்து கொதித்து போயுள்ளார் ஷாஜி கைலாஷ்.
“யாரோ சிறுபிள்ளைத்தனமாக பரப்பிவிட்ட வதந்தி இது. என் படத்தின் கதை என்னவென்று நான் தான் தீர்மானிக்கவேண்டுமே தவிர, பதிலாக யாரோ கிளப்பிவிட்ட வதந்தி அல்ல.. இன்னும் சிலர் நான், சரிதா நாயரை என் படத்தில் நடிக்க வைக்கப்போவதாக கூட செய்தியை பரப்பி வருகிறார்கள். இதில் எதுவும் உண்மையில்லை.. தற்போது தமிழில் 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கிவரும் நான், அடுத்ததாக சுரேஷ்கோபியை போலீஸ் ஆபிசராக வைத்து மலையாளத்தில் படம் இயக்கவுள்ளேன்.. இது மட்டும் தான் உண்மை” என சூடம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார்.