ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கோ உடனடியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்வதில் கேரளாவை பொறுத்தவரை எப்போதும் மம்முட்டியும் அவரது ரசிகர்மன்றமும் முன்னணியில் இருக்கின்றனர்.. அந்தவகையில் சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வீடு வாசல் இழந்த எண்ணற்றோருக்கு தங்களால் ஆன உதவியை செய்யும் விதமாக அபுதாபியில் உள்ள மம்முட்டி ரசிகர்மன்றம் மிகப்பெரிய தொகை ஒன்றை திரட்டியது.
இந்த தொகையை நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உணவு தேவைக்காக செலவிடும்படி கூறி, அபுதாபியில் உள்ள நேபாள தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோல மூன்று வருடங்களுக்கு முன்பு சிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற் சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 40 லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருள்களை, மம்முட்டி இலவசமாக அளித்து உதவினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.