ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தைப்பிடித்த சார்மி பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவர் தற்போது பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லக்ஷ்மி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் தனது ஜோதி லக்ஷ்மி படத்தை பற்றியும், இயக்குனர் பூரி ஜெகன்நாத் பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, ஒரு படத்திற்கு இயக்குனர் தான் இதயம் போன்றவர். அவரைத்தான் அந்த படத்தில் பணியாற்றும் அனைவருமே முழுமையாக நம்ப வேண்டும். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதனை சரியாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். நான் எப்பொழுதுமே இயக்குனர்களை முழுவதுமாக நம்புவேன். குறிப்பாக பூரி ஜெகநாத் படம் என்றால் நான் கதை கூட கேட்க மாட்டேன். ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவைவோ அதை சரியாக செய்வேன். எனக்கு தலை சிறந்த நடிகரான அமிதாபுடன் நடிக்க காரணமாக இருந்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான். அதுவே என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது. தற்போது நான் நடித்துவரும் ஜோதி லக்ஷ்மி படம் முற்றிலும் வித்தியாசமான படமாகும். என்னை முற்றிலுமாக வித்தியாசமாக மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர். நானும், அவரும் நடிப்பு தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றோம். குறிப்பாக ஆக்க பூர்வமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றோம். அவர் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவ்வாறு சார்மி கூறியுள்ளார்.