மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' படம் அவருக்கு மீண்டும் ஒரு திருப்பு முனையைத் தந்து மேலும் பல படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. தற்போது தமிழில் “அப்பா டக்கர், பூலோகம், செல்வராகவன் படம், அரண்மனை 2, நாயகி” என ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளரும், இளம் தொழிலதிபருமான வருண்மணியனுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால், அதன் பின் அவர்களிருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள் என்ற செய்திகள் கடந்த சில வாரங்களாகவே அடிபட்டு வந்தன. இதனிடையே நேற்று த்ரிஷா தன்னுடைய 33வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதற்கு வருண்மணியன் வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை வைத்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா, மாட்டார்களா என்ற விஷயத்தை ஓரளவிற்கு கணித்து விடலாம் என பலரும் எதிர்பார்த்தனர்.
தமிழ், தெலுங்குத் திரையுலகின் பல நட்சத்திரங்கள் நேற்று அதிகாலை முதலே த்ரிஷாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க, வருண்மணியன் இதுவரை த்ரிஷாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்காமல் இருக்கிறார். இதன் மூலம் அவர்களிருவரின் பிரிவு உண்மைதானோ என்று யோசிக்க வைக்கிறது. சம்பந்தப்பட்ட இருவரும் இது பற்றி அறிவிக்காதவரை இந்த விஷயத்தில் இப்போதைக்கு வேறு எதையும் சொல்ல முடியாது.