ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமல் நடித்த சத்யா படத்தில் இயக்குனரானவர் சுரேஷ்கிருஷ்ணா. அதையடுத்து ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா, பாபா என முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கினார். ஆனால் விஜயகாந்த் நடித்த கஜேந்திராவுக்கு பிறகு அவர் இயக்கிய பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஆறுமுகம், இளைஞன் போன்ற படங்கள் தோல்வியடைந்ததால், அவரது மார்க்கெட் சரிந்தது. அதனால் சின்னத்திரைக்கு சென்று சில தொடர்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ரெடி பண்ணி ரஜினியை அணுகினார்.ஆனால் அவரோ, என்னதான் வித்தியாசமான கதை என்றாலும், பாட்ஷாவை மாதிரி இன்னொரு ஹிட் கொடுப்பது அரிதான விசயம் என்று சொல்லி அந்த முயற்சியை கைவிட சொல்லிவிட்டார். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே ஒரு படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் சுரேஷ்கிருஷ்ணா ஈடுபட்டிருக்கிறார். அதன்காரணமாக, யாராவது தன்னை சினிமா ஆடியோ விழாக்களுககு அழைத்தால்கூட இப்போது என்னால் வரஇயலாது என்று மறுத்து வருகிறார். அதன்காரணமாக, சுரேஷ்கிருஷ்ணாவின் உதவியாளர் ராஜீவ் பிரசாத் இயக்கியுள்ள சதுரன் படத்தின் இசை விழாவுக்கு அழைத்தபோதுகூட தன்னால் இப்போது வரமுடியாது என்று கூறி விட்டாராம் அவர்.
ஆனபோதும், தனது முதல் பட விழாவுக்கு குருநாதர் வராமல் இருந்தால் மரியாதை இல்லை என்று நினைத்த ராஜீவ் பிரசாத், சுரேஷ்கிருஷ்ணா சொல்லும் தேதியில் சதுரன் ஆடியோ விழாவை நடத்த முடிவு செய்து அவர் சொல்லும் தேதியில் ஆடியோ விழாவை நடத்த காத்துக்கொண்டிருக்கிறார்.