ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அலைபாயுதே' படம் வந்த பிறகு பல இளம் பெண்களின் கனவு நாயகனாக விளங்கியவர் மாதவன். அடுத்தடுத்து பெரிய அளவில் வலம் வந்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழில் “மின்னலே, ரன்” ஆகிய இரண்டு வெற்றிப் படங்களிலும் பெயர் சொல்லும்படியாக 'அன்பே சிவம்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பின் அவர் தமிழில் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்விப் படங்கள்தான். கடைசியாக அவர் நாயகனாக நடித்த 'வேட்டை' படமும் தோல்விப் படம்தான்.இப்போது மூன்று வருடங்கள் கழித்து தமிழ் மற்றும் ஹிந்தியில் தயாராகும் 'இறுதிச்சுற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் 'தனு வெட்ஸ் மனு' இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் விரைவில் வெளிவர உள்ளது.“இத்தனை வருட இடைவெளியை நான் வேண்டுமென்றேதான் எடுத்துக் கொண்டேன். என்னை புதுப்பித்துக் கொள்ளவும் எனக்குள் உள்ள திறமையை மீண்டும் வெளிக்கொணரவும் வசதியாக இது இருந்தது. திரையுலகத்தில் நான் சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று என் மனைவியிடம் சொன்ன போது அவரும் அதற்கு சம்மதித்தார். இப்படி ஒரு காதலான மனைவி என் வாழ்க்கையில் அமைந்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்,” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மாதவன் தெரிவித்துள்ளார்