ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உத்தமவில்லன் படம் பல தடைகளைக் கடந்து இன்று திரைக்கு வந்துவிட்டது. இந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக இடம் பொருள் ஏவல் படம் வெளிவர உள்ளது. தென் மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கி உள்ள இந்தப் படம் மலைக்கிராம மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசுகிறது. விஜய்சேதுபதி, விஷ்ணு இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இடம்பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர், படம் வெளி வந்த பிறகு பரபரப்பாக பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.
இடம் பொருள் ஏவல் படத்தின் கதையைக் கேட்டதும் மொத்தமாக 50 நாட்கள் கால்ஷீட்டைக் கொடுத்திருக்கிறாராம். அது மட்டுமல்ல, தான் நடிக்காத நாட்களிலும் கூட படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே அருகில் இருந்திருக்கிறார். 6.5 கோடி பட்ஜெட்டில், 80 நாட்களில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாகச் சொன்ன சீனு ராமசாமி, 76 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருக்கிறாராம். விஜய் சேதுபதிக்கு மட்டுமல்ல விஷ்ணுவுக்கும் இடம் பொருள் ஏவல் மிகப்பெரிய பிரேக்கைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.