'ஜனநாயகன்' முன்னோட்ட வீடியோ: பார்வைகளில் முன்னணி, விருப்பங்களில் பின்னணி | ஒய்.ஜி.மகேந்திரனின் 'சாருகேசி': ரஜினி சொன்னதால் படம் இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா | 'ஜனநாயகன்' அந்த பட ரீமேக்கா? மீண்டும் வெடித்த சர்ச்சை | பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வாழ்க்கை சினிமாவாகிறது | வில்லனாக மாறுவாரா விக்ரம்பிரபு | ஒரே நேரத்தில் ஹிந்தி, மலையாளத்தில் தயாராகும் 'திரிஷ்யம் 3' ; துவங்கும் தேதி ரிலீஸ் தேதி இரண்டும் ஒன்றே | ராஜமவுலி பட ஈயை காப்பி அடித்ததாக மலையாள படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் | போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு |
மலையாள நடிகர் ஜெயராமின் இன்னொரு முகம் செண்டை மேள கலைஞர் என்பது. அவரது குடும்பத்தின் பாரம்பரியம் யானை வளர்ப்பும், செண்டைமேளமும் கலந்தது. கேரளாவில் உள்ள தனது வீட்டில் 3 யானைகளை வளர்த்து வரும் ஜெயராம். முக்கிய கோவில்களின் விழாக்களுக்கு இலவசமாக தானே சென்று செண்டை மேளம் வாசிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஜெயராமுக்கு கண்ணூர் சிறையிலிருந்து ஒரு கைதி கடிதம் எழுதியிருந்தார். அதில் "கண்ணூர் சிறையில் இருக்கும் கைதிகள் செண்டை மேளம் கற்க ஆர்வமா இருக்கிறோம். சிலர் கற்றும் வருகிறோம். சொந்தமாக செண்டை மேளம் இல்லாததால் வாடகைக்கு எடுத்து பயற்சி எடுக்கிறோம். இதற்கு சிறை நிர்வாகத்திடம் போதிய பணம் இல்லை. இதனால் எங்கள் பயிற்சி பாதியில் நிற்கிறது. செண்டை மேள கலைஞரான நீங்கள் எங்களுக்கு உதவினால் நாங்களும் செண்டை மேளத்தை கற்போம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உடனே ஜெயராம் கண்ணூர் சிறை நிர்வாகத்திடம் பேசி தனது செலவில் 11 செண்டை மேளங்களை வாங்கி சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதற்கான எளிய விழா கண்ணூர் சிறைச்சாலையில் நடந்தது. 11 செண்டை மேளங்களின் மதிப்பு 5 லட்சத்துக்கும் கூடுதலாம்.