தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் ஜெயராமின் இன்னொரு முகம் செண்டை மேள கலைஞர் என்பது. அவரது குடும்பத்தின் பாரம்பரியம் யானை வளர்ப்பும், செண்டைமேளமும் கலந்தது. கேரளாவில் உள்ள தனது வீட்டில் 3 யானைகளை வளர்த்து வரும் ஜெயராம். முக்கிய கோவில்களின் விழாக்களுக்கு இலவசமாக தானே சென்று செண்டை மேளம் வாசிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஜெயராமுக்கு கண்ணூர் சிறையிலிருந்து ஒரு கைதி கடிதம் எழுதியிருந்தார். அதில் "கண்ணூர் சிறையில் இருக்கும் கைதிகள் செண்டை மேளம் கற்க ஆர்வமா இருக்கிறோம். சிலர் கற்றும் வருகிறோம். சொந்தமாக செண்டை மேளம் இல்லாததால் வாடகைக்கு எடுத்து பயற்சி எடுக்கிறோம். இதற்கு சிறை நிர்வாகத்திடம் போதிய பணம் இல்லை. இதனால் எங்கள் பயிற்சி பாதியில் நிற்கிறது. செண்டை மேள கலைஞரான நீங்கள் எங்களுக்கு உதவினால் நாங்களும் செண்டை மேளத்தை கற்போம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உடனே ஜெயராம் கண்ணூர் சிறை நிர்வாகத்திடம் பேசி தனது செலவில் 11 செண்டை மேளங்களை வாங்கி சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதற்கான எளிய விழா கண்ணூர் சிறைச்சாலையில் நடந்தது. 11 செண்டை மேளங்களின் மதிப்பு 5 லட்சத்துக்கும் கூடுதலாம்.