சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
மலையாள நடிகர் ஜெயராமின் இன்னொரு முகம் செண்டை மேள கலைஞர் என்பது. அவரது குடும்பத்தின் பாரம்பரியம் யானை வளர்ப்பும், செண்டைமேளமும் கலந்தது. கேரளாவில் உள்ள தனது வீட்டில் 3 யானைகளை வளர்த்து வரும் ஜெயராம். முக்கிய கோவில்களின் விழாக்களுக்கு இலவசமாக தானே சென்று செண்டை மேளம் வாசிப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஜெயராமுக்கு கண்ணூர் சிறையிலிருந்து ஒரு கைதி கடிதம் எழுதியிருந்தார். அதில் "கண்ணூர் சிறையில் இருக்கும் கைதிகள் செண்டை மேளம் கற்க ஆர்வமா இருக்கிறோம். சிலர் கற்றும் வருகிறோம். சொந்தமாக செண்டை மேளம் இல்லாததால் வாடகைக்கு எடுத்து பயற்சி எடுக்கிறோம். இதற்கு சிறை நிர்வாகத்திடம் போதிய பணம் இல்லை. இதனால் எங்கள் பயிற்சி பாதியில் நிற்கிறது. செண்டை மேள கலைஞரான நீங்கள் எங்களுக்கு உதவினால் நாங்களும் செண்டை மேளத்தை கற்போம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உடனே ஜெயராம் கண்ணூர் சிறை நிர்வாகத்திடம் பேசி தனது செலவில் 11 செண்டை மேளங்களை வாங்கி சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதற்கான எளிய விழா கண்ணூர் சிறைச்சாலையில் நடந்தது. 11 செண்டை மேளங்களின் மதிப்பு 5 லட்சத்துக்கும் கூடுதலாம்.