14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையிலும் சில நேரங்களில் ஹீரோ ஆவது உண்டு. நேபாளத்தில் ஏற்பட்ட உலகையே உலுக்கிய நிலநடுக்கத்தால், பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்து போய் உள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண், நேபாள நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்காக உதவ முன் வந்துள்ளார். அவர் அங்கு பாதிப்பு அடைந்த மக்களுக்கு தேவையான மருந்துகளை அனுப்ப இருக்கிறார். ஒரு பிரபல மருத்துவமனையோடு இணைந்து ராம் சரண் அத்தியாவசிய மருந்து வகைகள், க்ளுகோஸ் பாக்கெட் மற்றும் இதர தேவையான பொருட்களை அனுப்ப இருக்கிறார். ஏற்கனவே இமாலய மலைப்பகுதியில் ஷூட்டிங் எடுக்க சென்ற தெலுங்கு படக்குழு ஒன்று நிலநடுக்கத்தில் சிக்கியது.அதில் பிரபல நடனயாசிரியரும், ஹீரோவுமான விஜய் என்பவர் இறந்தது நினைவிருக்கலாம். இப்போது மெகா பவர் ஸ்டார் நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருப்பதால், வரும் நாட்களில் இன்னும் சில பிரபலங்கள் உதவ இருப்பதாக தெரிகிறது.