அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
இதுவரை தான் நடித்தது எல்லாமே மொக்கபடம் தான் என்று கலகலப்பாக கூறுகிறார் நடிகர் சிவா.
சென்னை-28, சரோஜா, தமிழ்படம், வ குவாட்டர் கட்டிங், போன்ற படங்களில் நடித்துள்ள சிவா, பரதன், விஐபி, புன்னகை பூவே போன்ற படங்களை இயக்கிய டி.சபாபதி இயக்கும் பதினாறு என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மதுஷாலினி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்நது. இதில் பேசிய சிவா, "இதற்கு முன் நான் சென்னை 28 படம் பண்ணேன். அந்தப் படம் எப்படி என்று கவுதம் மேனன் கேட்டார். மொக்கைப் படம் என்றேன். அடுத்து தமிழ்ப் படம்... அதைப் பற்றி அவருக்கே தெரிந்துவிட்டது போலிருக்கிறது. கேட்கவே இல்லை. அடுத்தடுத்த படங்களும் அப்படித்தான். எல்லாம் மொக்கைப் படங்கள். ஆனால் இந்த படம்தான் சீரியஸாக நான் பண்ணும் நல்ல படம் என்றார். கூடவே நாளைலருந்து நான் பரபரப்பாக நியூசில் வருவேன், என்று ஒரு கமெண்டையும் சொன்னார்.