மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எப்போதும் நடிகைகள் சென்னையில் இருந்துக்கொண்டே வெளியூரில் இருக்கிறேன் என்பார்கள். அந்த வகையில் ராய்லட்சுமியை அவருடைய பர்ஷனல் நம்பருக்கு போன் செய்தால் முன்பையில் இருக்கிறேன் என்றார். உண்மை அதுவல்ல சவுக்கார்பேட்டை படபிடிப்பில் அம்மணி பிஸியாக இருக்கிறார். கடந்த 15 நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் தாண்டியிருக்கும் பெரும்களத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு பாதிக்கும என்பதால் லட்சுமி இப்படி சொல்லியிருக்கலாம் என்று நாம் கருதியபோது அப்படி ஏதும் இல்லையாம். ஓட்டலில் தங்கி கதை கேட்பதும் தன்னுடைய நண்பர்களை ஓட்டலுக்கு வரவழைத்து நட்பை வாய் வார்த்தை மூலம் பரிமாறி கொள்கிறார்களாம். அதே நேரத்தில் திடீர் என்று சவுகார்பேட்டை பட இயக்குனர் வடிவுடையான் ராய்யை படபிடிப்பு தளத்துக்கு வரவழைத்து நடிக்க சொல்லி விடுகிறார். இதை மறுத்தால் பிரச்சனையாகி விடும். இனிமேல் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருக்க வேண்டும் அப்போது தான் இண்டஸ்ட்ரி நமக்கு முக்கியத்தும் கொடுக்கும் என்பதை உணர்ந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் படபிடிப்பில் கலந்து கொள்கிறாராம். ராய், இப்படத்தில் மாயா என்ற பெயரில் நடிக்கிறார். இதற்காக ஆங்கில பேய் படங்களை அதிகம் பார்த்து நடிக்கிறாராம்.