ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவான படம் சிவப்பு. இலங்கை அகதிகள் பற்றிய கதை என்பதால் படத்தின் இயக்குனர் சத்யசிவா சென்சாரில் எதையெல்லாம் வெட்ட சொல்வார்கள் என்பதை முன்கூட்டியே யோசித்து அதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு உருவாக்கி உள்ளார். படம் சென்சாருக்கு சென்றது. ஒரு கட் கூட இல்லாமல் தற்போது திரைக்கு வருகிறது. இதில் ராஜ்கிரண் கோனார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகி ரூபா மஞ்சரி மேக்கப் போடாமல் அழுக்கான தோற்றத்தில் கட்டட தொழிலாளியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் முக்தா ஆர் கோவிந்த் தயாரித்திருக்கிறார். படபிடிப்பு முடிந்த போது கோவிந்த் இறந்து விடவே அவரது தம்பி முக்தா ஆர் ரவி படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்.
விரைவில் சிவப்பு திரைக்கு வர உள்ளது. அரண்மனைக்கிளி, ராசாவின்மனசினிலே என ராஜ்கிரண் நடித்த பல படங்களை வாங்கி ரிலீஸ் செய்து வெற்றி கண்ட எஸ்எஸ் ஸ்டூடியோ தேசிகன் இந்த படத்தை திரைக்கு கொண்டு வருகிறார். நாயகன் நவீன் சந்திரனின் முதல் படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார். திரைக்கு வராமல் இருந்த இந்த படத்தை நடிகர் ராஜ்கிரன் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் எடுத்து திரைக்கு கொண்டு வரலாம் என்று யோசித்த போது தான் எதேச்சியாக ராஜ்கிரணை சந்தித்த தேசிகனுக்கு சிபப்பு பட ரிலீஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. மஞ்சரி இலங்கை தமிழ் பெண் ஒருவரை வைத்து இலங்கை தமிழ் கற்று சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.