ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முயற்சிதான் தங்களது வெற்றிக்கு உண்மையான காரணம் என்பது வெற்றி பெற்றவர்களிடம் கேட்டால் சொல்வார்கள். அப்படி ஒரு வெற்றியைப் பெற்று இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இன்றைய சில முன்னணி நடிகர்களும் ஒரு காலத்தில் ஒரு சில காட்சிகளில் தலை காட்டியவர்களாக, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர்களாக இருந்தவர்கள்தான். அவர்களது கடுமையான உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள்.
விஜய் சேதுபதி நாயகனாக நடித்த முதல் படம் 'தென்மேற்குப் பருவக்காற்று'. அந்தப் படத்திற்கு முன்பே சில படங்களில் அவர் 'தலை' காட்டி நடித்திருக்கிறார். அவற்றில் ஒரு படம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயனாக நடித்த 'புதுப்பேட்டை'. அந்தப் படத்தில் அடியாட்களில் ஒருவராக விஜய் சேதுபதி நடித்திருப்பார்.
அன்று தனுஷுடன் அடியாட்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்த விஜய் சேதுபதி, இன்று தனுஷ் தயாரிப்பில் தனி நாயகனாக 'நானும் ரௌடிதான்' படத்தில் நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார். இதற்கு விஜய் சேதுபதியின் முயற்சியும், நடிப்புத் திறமையும்தான் காரணம்.