ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் முதலில் தோல்வியை ருசிப்பவர்கள்தான் பின்னர் நல்லதொரு வெற்றியைப் பெற்று முன்னணிக்கு வருகிறார்கள். இது பலருக்கும் பொருந்தும் ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது. இன்று தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமான போது பெரிய வரவேற்பு இல்லை. அவர் நாயகியாக அறிமுகமான 'பாணா காத்தாடி', அடுத்து வெளிவந்த 'மாஸ்கோவின் காவிரி' ஆகிய படங்கள் அவருக்குத் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகி 2012ல் வெளிவந்த 'நான் ஈ' படம் வெற்றி பெற்ற பிறகுதான் தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பார்வை சமந்தா பக்கம் திரும்பியது. அதைத் தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான்' ஆகிய படங்கள் மீண்டும் தோல்வியடைய சமந்தாவின் தமிழ்த் திரையுலக மார்க்கெட் கொஞ்சம் ஆட்டம் கண்டது. ஆனாலும், விஜய் ஜோடியாக சமந்தா நடித்து வெளிவந்த 'கத்தி' படம் அவரை மீண்டும் காப்பாற்றியது. இடையில் நிறைய தெலுங்குப் படங்களில் நடித்து, அதில் பல படங்கள் வெற்றியடைய சமந்தா தெலுங்கின் முன்னணி ஹீரோயினாக மாறினார். தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை தங்களது அபிமான நாயகிகளில் ஒருவராக கொண்டாட ஆரம்பித்தனர். சமீபத்தில் வெளிவந்த 'சன் ஆப் சத்தியமூர்த்தி' படம் வரை அவரது வெற்றி ராசி தெலுங்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.