ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானபோதும், உன்னைச்சரணடைந்தே என்ற படத்தை தயாரித்த எஸ்.பி.பி.சரண் அந்த படத்தில் தானும் ஒரு வேடத்தில் நடித்தார். அதையடுத்து, சரோஜா, துரோகி, வானவராயன் வல்லவராயன் என பல படங்களில் நடித்தார். அதேசமயம், நடிப்பு, தயாரிப்பு என்று பல பாதைகளில் பயணித்தபோதும் சினிமாவிலும் தொடர்ந்து பாடி வந்த சரண், தற்போது இந்தியா பாகிஸ்தான் என்ற படத்திற்காக பாடலாசிரியர் அண்ணாமலை எழுதியுள்ள, ஒரு பொண்ணை பார்த்தேன் மாமா, அவ கொன்னுபுட்டா ஆமா -என்ற ஒரு கலக்கலான பாடலை பாடியிருக்கிறார். இந்த ஜாலியான பாடலை தனது வழக்கமான குரலில் பாடாமல் தனது குரலை வித்தியாசப்படுத்தி பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.சரண். இந்த பாடல் இணைய தளத்தில் வெளியானதை அடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்கள். அதனால், அப்பாடலை எழுதிய அண்ணாமலை, பாடிய எஸ்.பி.பி.சரண், இசையமைத்த தீனா தேவராஜன் ஆகியோர் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.