ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சினிமாவில் பலர் டபுள் ரோல் செய்திருப்பார்கள். சினிமாத்துறையில் டபுள் ரோல் செய்பவர் 'நட்டி' என்கிற நட்ராஜ். பாலிவுட்டில் நம்பர் ஒன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்கும் நட்ராஜ் இன்னொரு பக்கம் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். 'சதுரங்க வேட்டை' மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நட்ராஜ் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'புலி' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
புலி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்திதை எட்டியுள்ளநிலையில் விரைவில் புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம் நட்ராஜ். தலக்கோணம் பகுதியில் 'புலி' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராமு என்பவர், நட்ராஜிடம் கதை ஒன்றைக் கூறியுள்ளார். அக்கதை நட்ராஜுக்குப் பிடித்துப்போகவே அந்தக்கதையில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நட்ராஜ்.
நட்ராஜுடன் 'மூடர்கூடம்' புகழ் ரஜாஜியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். 'என்னை அறிந்தால்' படத்தின் நாயகிகளில் ஒருவரான பார்வதி நாயரிடம் இப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். 1980 களில் கதை நடப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் ராமு.