மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
தமிழ், மலையாளத்தில் பல முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடியவர் மீரா ஜாஸ்மின். தமிழில் ரன், புதிய கீதை, ஆயுத எழுத்து, கஸ்தூரிமான், சண்டக்கோழி, நேபாளி, மம்பட்டியான் என பல படங்களில் நடித்த மீராஜாஸ்மினுக்கு வழக்கம்போல் திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைந்து போயின. ஆனால் முன்னணி ஹீரோக்கள் அவருடன் நடிக்கவில்லை என்றபோதும், இங்க என்ன சொல்லுது என்ற படத்தில் விடிவி கணேசுக்கு ஜோடியாக நடித்தார் மீரா ஜாஸ்மின். அதேபோல் புதுமுக ஹீரோ பார்த்தியுடன் விஞ்ஞானி என்ற படத்திலும் நடித்தார். அதையடுத்து தமிழில் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தில் அவர் ஒரு கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் சில படங்கள் மீரா ஜாஸ்மினை தேடிச்சென்றபோது, அவர் தனக்கு கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கேட்டதோடு, சம்பளத்தை ரொம்ப ஜாஸ்தியாக கேட்டாராம். அதாவது முதலில் 40 லட்சம் வேண்டும் என்ற பிடிவாதமாக இருந்தவர், இறுதியில் 30 லட்சமாவது இருக்க வேண்டும். அதைவிட குறைந்த சம்பளத்தில் நடிக்க மாட்டேன் என்று அடித்து சொல்லிவிட்டாராம். விளைவு, கேரக்டர் நடிகையான பிறகும் ஹீரோயினி ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கிறாரே என்று அந்த கம்பெனிகள் மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக வேறு நடிகையை புக் பண்ணி விட்டன.