ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ராணுவ யுத்தம் தொடர்பான படங்கள் ஹாலிவுட்டில் அடிக்கடி வெளிவரும். தமிழில் அத்தி பூத்த மாதிரி எப்போதாவதுதான் வரும். அப்படி வர இருக்கும் படம் மூன்றாம் உலகப்போர். 2025ம் ஆண்டில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடுமையான போர் மூண்டு அது மூன்றாவது உலகப்போராக மாறுகிறது. அந்த போர் எதனால் உருவானது. எப்படி நடந்தது. யார் வென்றார்கள். உலகம் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.பாலை படத்தில் நடித்த சுனில் குமார் ஹீரோவாகவும், கதை திரைக்கதை வசனம் இயக்கும் படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பெரும் பொருட் செலவில் ஆர்டின் ஃபிரேம்ஸ் மற்றும் டி.ஆர்.எஸ் ஸ்டூடியோஸ் சார்பில் அன்பு மற்றும் சுரேஷ் நாராயணன் தயாரிக்கிறார்கள். புதுமுக இயக்குனர் சுகன் கார்த்தி இயக்குகிறார். தேவா ஒளிப்பதிவு செய்கிறார், வேத் சங்கர் இசை அமைக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தின் டீசர் மே 1ந் தேதி வெளிவருகிறது. அதை தொடர்ந்து பாடல்கள் வெளியிடப்படுகிறது. ஜுன் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.