ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அடங்க மாட்டார் போல இருக்கிறதே இந்த ராம்கோபால் வர்மா.. 'ஓ காதல் கண்மணி' படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்ந்தார்.. நல்ல விஷயம் தான்.. ஆனால் அதற்காக அவரது தந்தை மம்முட்டியை ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு கீழ்த்தரமாக அவமதித்து விமர்சனம் செய்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. அதற்கு துல்கர் “என் தந்தை நடிப்பில் நான் பத்து லட்சத்தில் ஒரு சதவீதம் தான் செய்திருக்கிறேன்” என வர்மாவுக்கு மறைமுக பதிலடியும் கொடுத்துவிட்டார்.
பின்னே தனது தந்தையை யாரேனும் அவமரியாதை செய்தால், யாராக இருந்தாலும் பார்த்துக்கொண்டா இருப்பார்கள்..? துல்கரும் அதைத்தான் பண்ணினார். பிரச்சனை அத்தோடு முடிந்துவிட்டது என நினைத்தால், ராம்கோபால் வர்மாவின் ஆசிட் நாக்கு சும்மா இருக்காது போல தெரிகிறதே.. இப்போது மம்முட்டியை விட்டுவிட்டு துல்கரின் மீது அட்டாக்கை தொடங்கிவிட்டார்.
இது சம்பந்தமாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ரொம்பவும் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாம். உன்னைவிட நடிப்பு பற்றி எனக்கு அதிகம் தெரியும்.. அதனால் எனக்கு நடிப்பு பற்றி நீ கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை” என வார்த்தைகளில் அமிலம் கொட்டியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. ஏற்கனவே கடும் கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கும் வர்மா, இன்னும் சில தாக்குதல்களை சந்திக்க தயாராவது நல்லது.