ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் வெளிவந்த இதிகாசம் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர் ஸ்வப்னா. இவர் தற்போது தமிழில் தயாராகும் 9 டூ 10 என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். காந்தர்வன் படத்தில் நடித்த கதிர் ஹீரோ. இவர்கள் தவிர இயக்குனர் ஷரவண சுப்பையா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் பிச்சையெடுக்கும் தயாரிப்பாளராக நடித்த முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் விஜய் சண்முகவேல் இயக்குகிறார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் இசை அமைக்கிறார்.
"ஹீரோயின் ஸ்வப்னா ஒரு கால் டாக்சியில் அவசர வேலையாக காஞ்சிபுரம் செல்கிறாள். அந்த கால் டாக்சியின் டிரைவர் ஹீரோ கதிர். காஞ்சிபுரம் சென்றதும் ஸ்வப்னா கதிரிடம் ஒரு அதிர்ச்சி தகவலை சொல்கிறார். அதைவிட அதிர்ச்சி தகவலை கதிர் ஸ்வப்னாவுக்கு சொல்கிறார். இருவரையும் போலீஸ் ஒரு பக்கமும், வில்லன்கள் ஒருபக்கமும் துரத்துகிறார்க்ள. சம்பந்தமே இல்லாத கதிரும், ஸ்வப்னாவும் எப்படி சம்பந்தமாகிறார்கள் என்பததான் கதை" என்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல்.