மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இன்றைய காலகட்டத்தில் அயல்நாட்டு பெண்களை தமிழ் படங்களில் நடிக்க வைப்பது மிக எளிதாக ஆகிவிட்டது. முக்கிய வேடங்களில் நடித்து வந்த அயல்நாட்டு நடிகைகள் பின் கதாநாயகிகளாகவும் வளம் வளர தொடங்கினார்கள். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் தயாரிப்பில் இளம் கதாநாயகன் இர்பான் நடிக்கும் ஆகம் திரைப்படத்தில் ப்ரெஞ்ச் நடிகை அலியோனா முண்டேனு ஒரு முக்கியமான கதப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
பற்பல சர்வதேச படங்களில் நடித்திருக்கும் அலியோனா, சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் 'ஆகம்' படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் முனைவர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கத்தில், சோஷியல் த்ரில்லர் படமாக வேகமாக வளர்ந்து வருகிறது 'ஆகம்'.
“இப்படத்தில் நான் பன்னாட்டு நிறுவன அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஆழமான சமுதாயக் கருத்தை சொல்லும் இப்படத்தில் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. திரையில் ஆடி பாடி நடித்துள்ள காட்சிகளைக் காண எனக்கு ஆவலாய் உள்ளது. இயக்குனர் விஜய் ஆனந்த் முதல் படத்த்தில் வேலை செய்யும் கடைசி நபர் வரை அனைவரும் மிக அன்பானவர்கள், வேலையில் மிகுந்த ஈடு பாடு உள்ளவர்கள்.
இங்கு 'ஆகம்' குழுவின் விருந்தோம்பலை கண்டு வியந்து போனேன். இந்திய கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் உணவுகள் மிக காரமாகவுள்ளது எனினும் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இங்கு நிறைய படங்களில் நடிப்பேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.'வணக்கம், நன்றி“ எனத் தமிழில் கூறி விடைப் பெற்றார் அலியோனா.