ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.ஜி.பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் காவல். சீமான், சுசிகணேசன் ஆகியோரிடத்தில் உதவியாளராக பணியாற்றிய வி.ஆர்.நாகேந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விமல், சமுத்திரகனி, கீதா உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது காவல் படம் குறித்து இயக்குனர் நாகேந்திரன் பேசும்போது, நான் இயக்குனராக வேண்டும் என்பது 1995ல் போடப்பட்ட விதை. அதோடு, நான் இயக்குனரானதே பாதி பேருக்கு அதிர்ச்சி. ஆனால், சீமானிடம் 13 வருடங்களாக உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு, பின்னர் சுசிகணேசனிடமும் பணியாற்றியிருக்கிறேன். கடைசியாக இந்தியில் சார்ட் கட் என்ற படத்தில் உதவியாளராக ஒர்க் பண்ணிவிட்டுத்தான் இந்த காவல் படத்தின் கதை விமல், சமுத்திரகனி ஆகியோரிடம் சொன்னேன். விமல் கதையே கேட்டதும் கால்சீட் கொடுத்து விட்டார்.
ஆனால், சமுத்திரகனிதான் என்னை நம்பவில்லை, ஏய் நீயெல்லாம் டைரக்டரா, போடா போய் ஏதாவது வேற வேலை இருந்தா பாரு என்றார். அவரை இரண்டுமுறை சந்தித்தபோதும் கதையை கேட்காமல் இதையேத்தான் சொன்னார். அதன்பிறகு 3வதாக சந்தித்தபோதுதான் நான் சொன்ன கதையை கேட்டார். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் நடக்கும் சாதிக்கொலை, சென்னையில் பணத்துக்காக நடக்கும் கொலை என நடந்த சம்பவங்களை அவருக்கு 20 வருடங்களாக நான் செய்து வந்த ஆராய்ச்சிகளை பற்றி கூறினேன். அதன்பிறகுதான் என்மீதும், என் கதை மீதும் அவருக்கு நம்பிக்கை வந்தது. அதன்பிறகே கால்சீட் கொடுத்தார்.
அந்தவகையில், இந்த காவல் படத்தை ரவுடியிசம் குறித்து ஆராய்ச்சி செய்து படமாக்கியிருக்கிறேன். அப்படி நடந்த கொலைகள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்டே நடந்துள்ளது. குறிப்பாக கூலிக்காக நடந்த கொலைகளே அதிகம். அதாவது கொலையானவனுக்கும் ஏன் சாகுறோம்னு தெரிய மாட்டேங்குது. கொலை செய்றவனுக்கும் எதுக்காக செய்றோம்னு தெரிய மாட்டேங்குது. அதைப்பற்றித்தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.