ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பர தூதராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்த நகைக்கடை ஒன்றின் சமீபத்திய விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, அது அந்த விளம்பர படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகவும் திரும்பியுள்ளது.
அப்படி என்ன அந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது..?
விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய், மகாராணி போன்று ஒரு ஷோபாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் கருப்பு நிறத்திலான சிறுமி ஒருவர் குடை பிடித்து நிற்கிறார். இதுதான் சர்ச்சை ஏற்படுத்தியது. அதாவது இந்த விளம்பரம் இனவெறியை வெளிப்படுத்துவதாகவும், சிறார்களின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் நடித்த விளம்பரம் ஒன்று சர்ச்சை ஏற்படுத்தியதை தொடர்ந்து அதற்கு உடனடியாக பதில் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்களது கருத்துக்களை நான் மதிக்கிறேன். இந்த விளம்பரத்தின் போது ஷூட்டிங் எடுக்கப்பட்ட படம் இதுதான். பின்னர் இதை அந்த சிறுமி படத்தோடு இணைத்துள்ளனர். ஒரு விளம்பரம் எப்படி அமைய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கிரியேட்டர் தான் முடிவு செய்கிறார். இதில் நான் என்ன செய்ய முடியும். இருந்தாலும், உங்களது கருத்துக்களை சம்பந்தப்பட குழுவினருக்கு அனுப்பி வைத்து பரிசீலிக்கும்படி கேட்டுள்ளேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
இதனிடையே விளம்பரத்திற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து அந்த விளம்பரத்தை நீக்குவதவாக சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் அறிவித்துள்ளது.