ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் பொதுவாக ஹீரோக்களுக்குத்தான் சில தோல்விகளுக்குப் பிறகு ஒரு படம் மாபெரும் வெற்றியடைந்து மிகப் பெரிய பிரேக் கிடைக்கும். அதன் பின் அவர்கள் உச்சத்தில் செல்வார்கள். ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் தோல்விப் படங்களில் நடித்து விட்டால், அதன் பின் ராசியைக் காரணம் காட்டி அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னுடைய இரண்டாவது, மூன்றாவது இன்னிங்ஸிலும், இன்றைய இளம் நாயகிகளையும் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னணியில் இருப்பவர் நயன்தாரா.
தற்போது கை வசம் ஏழெட்டு படங்களை வைத்திருக்கிறார். அனைத்துமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்களாக, முக்கியமான நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் படங்களாகவே இருக்கிறது. இதனிடையே, நயன்தாராவை ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக அணுகியிருக்கிறார்கள். அந்த விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா 4 கோடி ரூபாய் கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். அதன் பின் எந்த குறிப்பிடத்தக்க விளம்பரத்திலும் அவர் நடிக்கவில்லை. இப்போது அவருக்குள்ள பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி மீண்டும் நடிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
நயன்தாரா கேட்ட 4 கோடி ருபாயைத் தரவும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் சம்மதித்து விட்டார்கள் என்று தெரிகிறது. அப்படியென்றால் ஒரு விளம்பரத்திற்காக தமிழ் நடிகை ஒருவர் அதிகம் வாங்கும் சம்பளம் இதுதான் என தாராளமாகச் சொல்லலாம்.