இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் | கைது செய்ய வந்த போலீசார் என்னுடன் மது அருந்தி விட்டு சென்றார்கள் ; ராம்கோபால் வர்மா கிண்டல் | ஏர்போர்ட்டில் தடையின்றி செல்ல தந்தையின் சலுகைகளை ரன்யா ராவ் பயன்படுத்தினார் ; அறிக்கை சமர்ப்பிப்பு | சூர்யா வீட்டில் நட்சத்திர பார்ட்டி ; திரிஷா ஆஜர் |
மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற ஆபாச பாடல் நீக்கப்படுவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் - த்ரிஷா ஜோடி நடித்திருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி போன்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற அக்மார்க் உத்தரவாதத்துடன் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் ஒன்று சர்ச்சைக்குள் சிக்கியது.
பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்த பாடல் வரிகளை அமைத்துள்ள கமல்ஹாசன், இந்த பாடலின் மூலம் காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார். கமல்ஹாசனின் இந்த பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். பெரிய நிறுவத்தின் தயாரிப்பு... பெரிய நடிகரின் படம் என்றெல்லாம் பார்க்காமல் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேநேரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், மன்மதன் அம்புக்கு யு சான்றிதழ் (சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்ப்பதற்கு ஏற்ற படம்) வழங்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசினார். அப்போது அவர், மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று ஆணித்தரமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடலை நீக்குவதாக கமலஹாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மன்மதன் அம்பு படத்தில் நான் எழுதிய பாடல் இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாக அறிகிறேன். இப்பாடல் தணிக்கை குழு அனுமதி பெற்று தனியார் டிவியில் 3 முறை ஒளிபரப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எனது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தால் சென்சார் சான்றிதழ் அனுமதி பெற்று பாடல் மக்கள் மனதை புண்படுத்தாத வகையில் அமைந்திருக்கும். மன்மதன் அம்பு படம் வேறொரு நிறுவனத்தின் படம். தற்போதைய சூழ்நிலையில் அரசியலும் மதமும் ஒன்றாக கலந்து விட்டது. மதமும், அரசியலும் ஒன்றாக கலந்த சூழலில் மக்களின் ரசனை குறையாதிருக்கவும், அனைவரும் படத்தை பார்க்கவும், சர்ச்சைக்குரிய பாடலை படத்திலிருந்து நீக்குகிறேன். எனது பகுத்தறிவு தேடல் தொடரும் என கூறினார்.