மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் சமுத்திரகனி, அதையடுத்து ஈசன் படத்தில் போலீசாக நடித்தார். ஆக வில்லன் இமேஜ் தன் மீது பதிந்து விடாத வகையில் அதன்பிறகு மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கியவர், சாட்டை படத்திற்கு பிறகு முக்கியமான நடிகராகி விட்டார். அதாவது சமுத்திரகனி என்றாலே அழுத்தமான கதாபாத்திரங்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்கிற இமேஜ் அவர் மீது விழுந்தது. அதோடு வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு அப்பாவாகவும் நடித்தார். இப்படி பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் அவர் இப்போது பல படங்களில் முக்கியமான ரோல்களில் பிசியாக நடித்து வருகிறார்.