ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதன்பிறகு சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதையடுத்து, படம் இயக்குவதில் இறங்காத வெற்றிமாறன், உதயம் என்எச்4, நான் ராஜாவாகப்போறேன், காக்கா முட்டை, பொறியாளன் போன்ற படங்களில் தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக தனது பங்களிப்பை செலுத்தி வந்தார்.
இந்நிலையில், மீண்டும் தனுஷை வைத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூதாடி என்ற படத்தை இயக்குவதாக தெரிவித்தார். ஆனால் அந்த படம் நடந்து கொண்டிருந்தபோதே திடீரென்று அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தியை ஜோடி சேர்த்து விசாரணை என்ற படத்தை தொடங்கினார்.
தனது முதல் இரண்டு படங்களைப்போன்று இந்த படத்திலும் தனது தனித்துவத்தை காண்பிக்க வேண்டும் என்று முழுவீச்சில் விசாரணை பட வேலைகளில் ஈடுபட்டிருந்த வெற்றிமாறன், கடந்த மாதத்தில் படப்பிடிப்பை முடித்தவர் இப்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்த படத்தில் கதையும், கதாபாத்திரமும் அட்டகத்தி தினேஷை பெரிய அளவில் பாதித்துள்ளதாம்.