தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா |
தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையான நித்யா மேனனின் நடிப்பில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஒ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்கள் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஓகே கண்மணி படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டலும், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழும் கதை களத்தில் படம் நகர்வதால் சில எதிர்ப்புகளையும் இப்படம் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் படத்தின் நாயகி நித்யா மேனன் இது குறித்து கூறுகையில், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழ்வது என்பது அவ்வாறு வாழும் தம்பதியர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பைப் பெற்றுள்ள ஓகே கண்மணி படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகன் துல்கர் சல்மானுடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.