ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையான நித்யா மேனனின் நடிப்பில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஒ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படங்கள் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஓகே கண்மணி படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டலும், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழும் கதை களத்தில் படம் நகர்வதால் சில எதிர்ப்புகளையும் இப்படம் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் படத்தின் நாயகி நித்யா மேனன் இது குறித்து கூறுகையில், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழ்வது என்பது அவ்வாறு வாழும் தம்பதியர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பைப் பெற்றுள்ள ஓகே கண்மணி படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகன் துல்கர் சல்மானுடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.