ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இதென்ன வம்பா போச்சு.. மம்முட்டி அவர் பையனுக்கு பார்த்து பார்த்து தானே பெயர் வைத்திருப்பார்.. அதெப்படி ஏதேச்சையாக வைக்க முடியும் என்று கிராஸ் கேள்வி கேட்கும் ஆளா நீங்கள்..? இப்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கியுள்ள 'ஒ காதல் கண்மணி படத்தில் நடித்திருக்கிறார் இல்லையா..? படத்தில் அவரது பெயர் ஆதித்யா வரதரராஜன். சுருக்கமாக ஆதி..! அதேபோல மம்முட்டி நடித்து கிட்டத்தட்ட அதே தினத்தில் தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படம் வெளியானது.
இந்தப்படத்தில் மனைவியை இழந்த, ஒரு பையனுக்கு தகப்பனாக நடித்திருகிறார் மம்முட்டி. படத்தில் அந்த சிறுவன் பெயரும் ஆதி தான். ஆதியாக நடித்த சிறுவனின் பெயர் சனூப் சந்தோஷ். இவன் ரேணிகுண்டா' புகழ் சனுஷாவின் தம்பி.. மணிரத்னம் படத்தில் துல்கர் ஒப்பந்தமான பின் அதில் அவரது கதாபாத்திரத்தின் ஆதி என்கிற பெயரை அடிக்கடி கேட்டதால், படத்தில் தன்னுடைய மகனாக நடித்தவருக்கும் அதையே வைக்கச்சொல்லிவிட்டாராம் மம்முட்டி. எப்படி ஒரு சென்டிமென்ட் பார்த்தீர்களா..?