ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன் வெளிவந்த “அன்புள்ள துரோகி” திரைப்படத்தில் இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் “சேட்டைதான் சேட்டைதான்...” எனத்தொடங்கித் தொடரும் பாடலை எழுதியதின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பாடலாசிரியர் மா.சிவஷங்கர்! அதன் பின் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்து சமீபமாக வெளிவந்த “என்றுமே ஆனந்தம்” படத்தில் கண்மணிராஜா இசையமைப்பில் “மின்னல் பூவாய் மின்னல் பூவாய்” பாடல் எழுதியதின் மூலமாக திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
அதன் வாயிலாக, பாடலாசிரியர் மா.சிவஷங்கர், தற்போது கார்த்திக் என்பவரது இயக்கத்தில் ஷியாம் இசையில் “அன்னம்” எனும் படத்தில் “பொன்புதையல் கண்டேனே...” செந்தில் ஆனந்த இயக்கத்தில் வேலன் எனும் புதியவரின் இசையில் “கிழக்கு சந்து” திரைப்படத்தில் “என்னமோ நடக்குதே...” ஜவஹர் இயக்கத்தில் சுனில்ஜேவியர் இசையில்”ஆறாம் பிறவி” படத்தில் “மூனு சீட்டு, மூனு சீட்டு...” உள்ளிட்ட பாடல்களை எழுதி அதன் வெளியீடுகளுக்காக காத்திருக்கிறார்! மேலும் “கண்ணெதிரே தோன்றினாள்” ரவிசந்திரனின் இயக்கத்தில் தீபக் நீலம்பூர் இசையில் “நட்பதிகாரம் 79” படத்தில் இவர் எழுதிய “பெண்ணே நீ...” பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க ஜொலிக்க தொடங்கி இருக்கிறதாம்!
12 வருடங்களுக்கு முன் ராஜேஷ்வைத்யா இசையில் “கனவுகள்” என்னும் இசை ஆல்பத்தில் ஆறு ஜனரஞ்சக பாடல்களையும் எழுதி ருசிகண்ட பாடலாசிரியர் மா.சிவசங்கருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கூடவே, கவிப்பேரரசு வைரமுத்து, நா. முத்துக்குமார், யுகபாரதி, விவேகா மாதிரி பெரும் பாடலாசிரியராக வர வேண்டும் என்ற லட்சியமும் இருக்கிறது! அவரது லட்சியம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்!!