ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என் மகனை தனியாக சிறை வைத்து பயமுறுத்தியுள்ளனர் என்று நடிகை வனிதா விஜயகுமார் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.
நடிகை வனிதா - நடிகர் ஆகாஷ்க்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரிக்கு ஒன்பது வயது. வனிதா, ஆகாஷ் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். பின், ஆனந்த்ராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். வனிதாவுக்கும், அவரது பெற்றோரான நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா இடையேயான குடும்பச் சண்டை, போலீஸ் நிலையம் வரை சென்றது. விஜயகுமார், மஞ்சுளாவுக்கு எதிராக போலீசில் வனிதா புகார் கொடுத்தார். ஆனால், விஜயகுமார் அளித்த புகாரில், வனிதாவின் கணவர் ஆனந்த்ராஜனை போலீசார் கைது செய்தனர். தற்போது, இவர் ஜாமீனில் உள்ளார்.
தன் வசம் இருந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை, நடிகர் ஆகாஷ் பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில், "ஹேபியஸ் கார்பஸ் மனுவை, நடிகை வனிதா தாக்கல் செய்தார். இம்மனுவை, நீதிபதிகள் தர்மா ராவ், அரி பரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. கோர்ட் உத்தரவுப்படி, கடந்த 13ம் தேதி விஜய் ஸ்ரீஹரி ஆஜர்படுத்தப்பட்டார். குடும்பப் பிரச்னை என்பதால், ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என வனிதாவின் வக்கீல் கோரினார். இதையடுத்து, விசாரணை 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கணவர், குழந்தைகளுடன் கோர்ட்டுக்கு நடிகை வனிதா வந்தார். மகன் விஜய், தாயார் உடன் நடிகர் ஆகாஷ், கோர்ட்டுக்கு வந்தார். வனிதா சார்பில் சீனியர் வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு, ஆகாஷ் சார்பில் வக்கீல் எம்.கே.இதாயதுல்லா வந்திருந்தனர். பிற்பகலில், நீதிபதி தர்மா ராவின் சேம்பரில் விசாரணை நடந்தது. நீதிபதிகள் தர்மா ராவ், அரி பரந்தாமன் இருவரும் விசாரணை நடத்தினர். முதலில், சிறுவன் விஜய் ஸ்ரீஹரியிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடந்தது. பின், நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்தினர். அதன்பின், வனிதா, விஜய் ஸ்ரீஹரியிடம் சேர்ந்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நடிகர் ஆகாஷ், அவரது தாயாரிடம் விசாரணை நடந்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு "டிவிஷன் பெஞ்ச் தள்ளி வைத்தது.
இதற்கிடையில், தன் வசம் மகன் விஜய் இருப்பதில் வனிதா குறுக்கிட தடை கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் ஆகாஷ் தாக்கல் செய்திருந்த மனு, விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த விவகாரம் குறித்து நடிகை வனிதா அளித்துள்ள பேட்டி :-
எனது மகன் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் மிரட்டி வைத்துள்ளார். என்னை பழிவாங்குவதற்காக எனது தந்தை விஜயகுமார் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார். விஜய் ஸ்ரீஹரியை தனியாக சிறை வைத்து, எதையோ சொல்லி அவனை பயமுறுத்தியுள்ளனர். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவன் மிரண்டுபோய் உள்ளான். என்னுடன் இருந்தபோது மகிழ்ச்சியோடு தங்கைகளுடன் பாசமாக இருப்பான். இப்போது அவர்களை பார்த்தால் விலகி ஓடுகிறான்.
விஜய் ஸ்ரீஹரி மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். அவனது திடீர் மாற்றத்தால் எனது 2 பெண் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணா... அண்ணா... என்று அவனது பாசத்துக்காக ஏங்குகிறார்கள். பள்ளிக்கு சென்ற இடத்தில் எனது 2 பெண் குழந்தைகளும் இதுபற்றி ஆசிரியர்களுடன் பேசியுள்ளனர். நீங்களாவது எங்கள் தாத்தாவுடன் பேசி, அண்ணாவை அனுப்பச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
பெற்ற தாய்க்குத்தான் பிள்ளை பாசம் தெரியும். நான் ஆசை ஆசையாய் வளர்த்த எனது மகன், என்னை வெறுக்கும் அளவுக்கு அவனது மனதை மாற்றியுள்ளனர். அவன் மனம் மாறி என்னுடன் மீண்டும் வருவான் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தாயும் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விஜய் ஸ்ரீஹரி இதுநாள்வரை என்னுடன்தான் இருந்தான் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த தாய்க்கும் ஏற்படக் கூடாது.
இவ்வாறு வனிதா விஜயகுமார் பேட்டியில் கூறியிருக்கிறார்.