பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வந்திருக்கும் ஓகே கண்மணி படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்படமும் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் படத்தின் இயக்குநர் மணிரத்னம் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இந்நிலையில் இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தெலுங்கில் திரைக்கு வந்த ஓகே கண்மணி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமானும், இயக்குநர் ராஜமௌலியும், நீண்ட நேரம் இது குறித்து பேசியுள்ளனராம். மேலும் பாகுபாலி படத்தினை இந்தியில் வெளியிடும் நிறுவனம் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு ஆங்கில படத்தை எடுப்பது குறித்து பேசி வருகின்றதாம். பேச்சு வார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்பட்டால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என தெரிகின்றது.