ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சுசீந்திரன் தம்பி ஏ.நந்தகுமார் தயாரிக்கும் படம் வில் அம்பு. வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ, பொறியாளன் படத்தில் நடித்த கல்யாண் இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். காடு படத்தில் நடித்த சமஸ்கிருதி, சாந்தினி, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார் நவீன் இசை அமைக்கிறார்.
"எந்த ஒரு சம்பவத்துக்கும் இரண்டு காரணிகள் இருக்கும். ஆனால் கண்ணுக்கு தெரியாத மூன்றாவது காரணி ஒன்றும் இருக்கும். சாலையில் ஒரு பஸ்சும் லாரியும் மோதி விபத்துக்குள்ளாவதாக வைத்துக் கொள்வோம். பஸ்சும், லாரியும் கண்ணுக்கு தெரிந்த காரணிகள் ஆனால் லாரிக்கும், பஸ்சுக்கும் இடையே சென்ற ஒரு பைக் ஓட்டுனர்தான் காரணம் என்பது தெரியாத மூன்றாவது காரணி.
இப்படித்தான் நம் வாழ்க்கையின் சில பிரச்னைகளுக்கு கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது காரணம் ஒன்று இருக்கிறது. அப்படிப்பட்ட மூன்றாவது காரணத்தை தேடி பயணப்படுகிற கதை. படத்தின் நாயகர்களான ஸ்ரீயும், கல்யாணும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவே மாட்டார்கள். ஆனால் ஒருவரால் மற்றவருக்கு தொடர்ந்து பிரச்னை வந்து கொண்டே இருக்கும். யார்டா அவன் என்று ஒருவரை ஓருவர் தேடிக் கொண்டிருப்பது மாதிரியான கதை" என்கிறார் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன்.