ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை ஒரு கேமராமேன் இயக்குனராக மாறி, ஒரு படத்தை இயக்கி ஹிட் கொடுத்துவிட்டால் தொடர்ந்து படங்களைத்தான் இயக்குவேன், கேமராவை தூக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டார்கள்.. அடுத்து ஒரு இயக்குனர் அழைத்தால் கேமராவை தூக்கி விடுவார்கள். தமிழிலும் வேல்ராஜ் போன்ற ஒரு சிலர் இருக்கிறார்கள் தான். ஆனால் மலையாளத்தில் இந்த எண்ணிக்கை அதிகம். 'அன்வர்' படத்தை இயக்கிய அமல் நீரத்தும் அப்படிப்பட்ட ஒரு ஆள் தான்.
பிரபல இயக்குனர் ஆஷிக் அபு ஒரு விளம்பரப்படம் எடுக்கப்போவதாக சொல்லி அமல் நீரத்தை அழைக்க, உடனே ஒப்புக்கொண்டார். ஆஷிக் கேட்டால் மறுக்காமல் சம்மதிக்கும் அவரது ஆஸ்தான நடிகர் பஹத் பாசில் மற்றும் அமல் நீரத் இயக்கிய 'அயூப்பிண்டே புஸ்தகம்' மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஜெயசூர்யா இருவரும் நடிக்க ஓகே சொல்ல, யூ.ஏ.இ எக்சேஞ் நிறுவனத்துக்காக மூன்று விளம்பரங்களை சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். ஆக இது சுய விளம்பரத்துக்காக சேர்ந்த கூட்டணி அல்ல என்பது தெளிவாகியுள்ளது.,